ஆத்தூர் கழக மாவட்டத்தில் கிளைக் கழக வாரியாக இளைஞரணியை கட்டமைத்து புதுப்பிப்பது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

ஆத்தூர், ஆக. 3– ஆத்தூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 2.8.2025 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆத்தூர் தா.வானவில் அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்முகிலன், தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி வீரன் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நோக்கவுரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப் பாளர் ஊமை.ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் சிறப்புரையாற்றினார்கள்.

மாவட்ட தலைவர் அ.சுரேஷ், மாவட்ட செயலாளர் நீ.சேகர், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மாயக் கண்ணன், ப.க தலைவர் வ.முருகானந்தம், நகர தலைவர் அண்ணாதுரை, ஆ.செல்வம், வீரமுத்து, அருன், இரா.ரமேஷ், வேணுகோபால். ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.அஜித், நன்றி உரையாற்றினார்.

தீர்மானங்கள்

ஆத்தூர் மாவட்டம் கழக நகர செயலாளர் தா. திவாகரின் தந்தை தாமரைச்செல்வன், மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தலை மையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

ஆத்தூர் கழக மாவட்டத்தில் உள்ள பழைய விடுதலை சந்தாக் களை புதுப்பித்தும். புதிய சந்தாக்களை சேர்ப்பது என முடிவு செய்யப்படு கிறது.

ஆத்தூர் கழக மாவட் டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் இளைஞரணி சார்பில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது எனவும் கிளைக் கழகங்கள் வாரியாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது. கழகத் தோழர்கள் இல்லங் கள்தோறும் கழக கொடி ஏற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

தலைமை கழகத்தின் வெளியான துண்டறிக்கையை  உடனடியாக அனைத்து இடங்களிலும் ஆசிரியர் அவர்கள் அறிவிப்பிற்கு இணங்க வீடு வீடாகச் கடை கடையாக கழக இளைஞரணி சார்பில்  கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு. க.ஸ்டாலின், அவர்கள் சிறப்புரையுடன் சென்னை மறைமலை நகரில் 2025 அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டிற்கு ஆத்தூர் மாவட்டத்திலிருந்து தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து விளம்பரங்களை செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டி தருவது என தீர்மானிக்கப்படுகிறது.

உலகத் தலைவர். தத்துவத் தலைவர் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை ஆத்தூர் மாவட்டம் முழுவதும் இளைஞரணி சார்பில் பட்டித்தொட்டி எங்கும் கோலாகலமான விழாவாக கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *