சென்னை மாநகராட்சியின் புதிய மைல்கல் ரூ.205.64 கோடி மதிப்புள்ள பசுமைப் பத்திரங்கள் வெளியீடு!

2 Min Read

சென்னை, ஆக.2- சென்னை மாநகராட்சி முதன்முறையாக ரூ.205.64 கோடி மதிப்புள்ள பசுமைப் பத்திரங்களை (Green Bonds) வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பத்திர வெளியீடு, கொடுங்கையூர் குப்பை மேட்டில் உள்ள 252 ஏக்கர் நிலத்தை மீட்டெடுக்கும் பயோமைனிங் திட்டத்திற்கு முக்கிய நிதி ஆதாரமாக அமையும்.

பசுமைப் பத்திரங்கள்

பசுமைப் பத்திரங்கள் என்பவை மரம் நடுதல், மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கு நிதி திரட்ட உதவும் ஒரு முதலீட்டு வழிமுறையாகும். இந்த பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வட்டியுடன் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நகரங்களின் மேம்பாட்டிற்கும் ஒரு முக்கியமான நிதி கருவியாகப் பார்க்கப்படுகிறது.

பயோமைனிங் திட்டத்திற்கு நிதி

கொடுங்கையூர் குப்பை மேடு பயோமைனிங் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.640.83 கோடி ஆகும். இதில் மாநகராட்சியின் பங்கு ரூ.385.64 கோடி. இந்தத் தொகையில் ரூ.205.64 கோடி பசுமைப் பத்திரங்கள் மூலம் திரட்டப்படவுள்ளது. மீதமுள்ள ரூ.180 கோடி ஜெர்மனியின் கேஎஃப் டபுள்யூ வங்கியின் கடன் மூலம் பெறப்படும்.

பசுமைப் பத்திரங்கள் வெளியீடு பிற இந்திய நகரங்களில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்தூர் (5.91 மடங்கு) மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் (5.13 மடங்கு) ஆகிய நகரங்களில் பசுமைப் பத்திரங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றிகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியின் பசுமைப் பத்திர வெளியீட்டிற்கும் முதலீட்டாளர்களிடையே நல்ல ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சென்னை மாநகராட்சியின் இரண்டாவது பத்திர வெளியீடாகும். கடந்த மே மாதம், மாநகராட்சி ரூ.200 கோடி மதிப்புள்ள பத்திரங்களை 7.97% வட்டியில் 10 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இது மாநகராட்சியின் முதல் பசுமைப் பத்திர வெளியீடாகும்.

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.100 கோடிக்கு ரூ.10 கோடி ஊக்கத்தொகை பெறப்படும் இத்திட்டம், விரைவில் மாநில அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி, நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு, எதிர்கால நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *