புதுக்கோட்டை, ஜூன் 12 – விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர் என ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட் டியுள்ளார்.
புதுக்கோட்டையில் 10.6.2023 அன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளில் ஒன்றிய பாஜக அரசைப் பற்றி விமர்சிக்கிறாரே தவிர, தரக்குறைவாக பேசவில்லை. விமர்சனம் செய்வதைக்கூட பாஜகவி னரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. அயல்நாடுகளுக்கு செல்லும் போது பேசாமல் மவுனமாகவா இருக்க முடியும்?
பிரதமரை விமர்சிப்பவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாட்டில் பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார். விமர்சனம் செய்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா? விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத கட்சியின் ஆட்சியை பார்க்கிறேன் என்றார்.