இதுதான் தீபாவளி பரிசா? அந்தோ பரிதாபம் தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள்

Viduthalai
1 Min Read

விபத்தில் சிக்கி 6 பேர் பலி! 25 பேர் காயம்!

தமிழ்நாடு

வாணியம்பாடி, நவ. 11- வாணியம்பாடி அருகே அரசு சொகுசுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

வாணியம்பாடி அருகே செட்டி யப்பனூரில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இன்று  (11.11.2023)அதிகாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த அரசு சொகுசுப் பேருந்து ஓட்டுந ரின் கட்டுப் பாட்டை இழந்ததால் சாலையின் தடுப்புச் சுவரை உடைத் துக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூருவை நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ் (45), சித்தூரை சேர்ந்த அஜீத் (25), மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக் குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து குறித்து வாணியம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் நேரில் ஆய்வு செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *