கழகக் களத்தில்…!

2 Min Read

2.8.2025 சனிக்கிழமை
ஆத்தூர் மாவட்ட
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: காலை 10 மணி * இடம்: த.வானவில் அலுவலகம், ஆத்தூர் * தலைமை: இரா.கார்முகிலன்  (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: சத்தியமூர்த்தி வீரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல் * குறிப்பு: குறித்த நேரத்தில் அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்ட திராவிடர்
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருச்செங்கோடு: மாலை 5 மணி* இடம்: பூமாலை வணிக வளாகம் முதல் தளம் திருச்செங்கோடு * தலைமை: அனந்தகுமார் கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் * வரவேற்புரை: கி.நந்தகுமார், நகர இளைஞரணி தலைவர் *நோக்க உரை: நாத்திக. பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர் * கருத்துரை: ஊமை. ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் * முன்னிலையாளர்கள்: அ.கு.குமார், மாவட்ட தலைவர். வை.பெரியசாமி, மாவட்ட செயலாளர்* பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல் * குறித்த நேரத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நூல்கள் ஆய்வரங்கம்

அரியலூர்: மாலை 5 மணி * இடம்: கோவை கிருஷ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி மாடியில் (செந்துறை பைபாஸ் ரோடு, அரியலூர்) * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: பெ.நடராஜன் (அரியலூர் மாவட்ட ப.க. தலைவர்) ** நூல்கள் ஆய்வுரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ – மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட செயலாளர், ப.க.), எழுத்தளார் வி.சி.வில்வம் தொகுத்த ‘கொள்கை வீராங்கணைகள்’ – பேராசிரியர் இ.வளனறிவு (அரியலூர் மாவட்ட அமைப்பாளர், ப.க.), முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய ‘மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்’ – போசிரியர் க.ராஜா கென்னடி (பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர், ப.க.) *வாழ்த்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.), வா.தமிழ்பிரபாகரன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி)  * நன்றியுரை: மருத்துவர் லகாந்தி (பெரம்பலூர் மாவட்ட செயலாளர், ப.க.) * ஏற்பாடு: அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

3.8.2025 ஞாயிற்றுக்கிழமை
மேட்டூர் மாவட்ட திராவிடர்
கழக இளைஞரணி கூட்டம்

எடப்பாடி: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், எடப்பாடி *தலைமை: சு.கபிலன் (இளைஞரணி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.சிறீதர் (இளைஞரணி மாவட்ட செயலாளர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நோக்கவுரை: நாத்திக பொன்முடி (இளைஞரணி மாநில செயலாளர்) * விழைவு: அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * நன்றியுரை: உல.கென்னடி (பாப்பம்பட்டி கிளைக் கழகத் தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *