தூத்துக்குடி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

1 Min Read

அரசியல்

தூத்துக்குடி, ஜூன் 12 – தூத்துக் குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.6.2023 காலை 11.00 மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு.இரா. குணசேகரன் தொடக்கவுயாற்றினார். 

தந்தைபெரியார் தமிழர்தலைவர் ஆகியோரின் பேரு ழைப்பை விளக்கி காப்பாளர்கள் மா.பால் ராசேந்திரம்,சு.காசி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

மாநில மாணவர்கழக செயலாளராக பொறுப் பேற்றுள்ள இரா.செந்தூரபாட்டியனுக்கு மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மா.தெய்வப்பிரியா மாவட்ட அமைப்பாளர் செ.வள்ளி ஆகியோர் பயனாடை போர்த்தி மகிழ்ந்தார்கள். இலட்சக் கணக்கான மாணவர்க ளின் கல்வி, வேலைகளுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து 16.6.2023 அன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் வழக்குரைஞர் செ.அர்சூன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *