அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிக்க முடிவு!

2 Min Read

 திருவாரூர் மாவட்டம். கொரடாச்சேரி ஒன்றிய 

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அரசியல்

திருவாரூர், ஜூன் 12 திருவாரூர் மாவட்டம், கொர டாச்சேரி ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் பருத்தியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் 10.6.2023 காலை 10.30 மணியளவில் ஒன்றிய தலைவர் தங்க.கலிய பெருமாள் தலைமை யிலும், மாநில விவசாய தொழிலாளரணி செய லாளர் க.வீரையன். மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் மேனாள் மாவட்ட தலைவர் மு.சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் பி.ரெத்தினசாமி இவர்கள் முன்னிலை யிலும் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் அவர்கள் நோக்க உரையாற்றிட, மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி சிறப்புரையாற்றினார். ஏராளமான கழகத் தோழர் கள் கலந்துகொண்டனர்.

நிறைவாக ஒன்றிய செயலாளர் சி.ஏகாம்பரம் அவர்கள் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்

பருத்தியூர் அம்சவல்லி, மீனாட்சி, மா.கோவிந்த ராசு மு.செல்வம், குதம்பநயணார்கோவில் குரு மூர்த்தி, முத்துலட்சுமி, விடையபுரம் கருப்பையன் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.

தீர்மானம் எண் 2:

தந்தை பெரியார் மனித உரிமை போர் வைக்கம் நூற்றாண்டு விழா – நீதிக் கட்சி நூற்றாண்டு விழா – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில். கிராமம் கிராமமாக வெகு விமரி சையாகவும், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர் களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிப்பது எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

‘விடுதலை’ சந்தாக்களை புதுப்பித்து சந்தாக் களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:

கழகப் பொதுக்குழு தீர்மானங்களை நிறை வேற்றுதல் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:

 திருவாரூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழுவதும் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துவது எனவும், பயிற்சி பட்டறைக்கு கொரடாச்சேரி ஒன்றியம் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி களையும் பங்கேற்க செய்வது எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

 செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகலமாக கொரடாச்சேரி ஒன்றியம் கிளைக் கழக வாரியாக தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *