வாலாஜாபாத், ஆக.1- வாலாஜாபாத் – செங்கல்பட்டு நெடுஞ் சாலையில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகள் பழைமை யான கல்வெட்டு கண் டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் – செங்கல் பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் ஒன்று உள்ளது.
கல்வெட்டு
இந்த கட்டடத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பார்க் கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டொன்று உள்ளதை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் எம்.டி.அஜய்குமார் மற்றும் செயலாளர் ந.மோகனகிருஷ்ணன் ஆகியோர் 30.7.2025 அன்று ஆய்வு செய்தனர்.
அந்த கள ஆய்வின் விவரம் பின்வருமாறு, இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் குறிப்பிட்ட தாவது 1829ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு 195 ஆண்டுகள் பழமையானது
இந்த கல்வெட்டு செய்தியை தொல்லியல் துறையின் உதவி கல் வெட்டாய்வாளர் ப.த.நாக ராஜன், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் இரா.ரமேஷ் மற்றும் மோ.பிரசன்னா, வரலாற்று ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பாழடைந்த மண்டபத்தை புதுப்பிக்க தன்னார்வலர்கள் குழு முயன்றபோதும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும், வாலாஜாபாத் வரலாற்றுச் சான்றாக திகழும் இந்த மண்டபத்தையும் கல்வெட்டையும் வருங் கால தலைமுறையினரும் அறியும் வகையில் தொல் லியல் துறை அல்லது இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாழடைந்த மண்டபத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்கவும் பராமரிக்கவும் வேண்டும் எனவும் வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மய்மத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.