இந்நாள் – அந்நாள்

1 Min Read

50% இட ஒதுக்கீடு தொடர்ச்சி (31.7.2025)

1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான (BC) இட ஒதுக்கீட்டை 31% இலிருந்து 50% ஆக உயர்த்தியது (31.7.2025). இதனால், பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது.

பொருளாதார அளவுகோலை பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் புகுத்தியதன் காரணமாக திராவிடர் கழகம் தொடர்ந்து நாடெங்கும் போராட்டத்தை நடத்தியது. சமூக நீதியில் அக்கறை கொண்ட தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் தோழர்கள் இணைந்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. வருமான வரம்பு ஆணை தீயிட்டுக் கொளுத்தப்பட்டு அதன் சாம்பல் கோட்டைக்கு அனுப்பப்பட்டது. அதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. பெரும் தோல்வியை சுமந்தது.

இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வை சரிசெய்யும் நோக்கில் வருமான வரம்பு ஆணை பின்வாங்கப்பட்டது. பொருளாதார அளவுகோல் நீக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *