இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

1 Min Read

சென்னை, ஜூலை 31 இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள்  29.07.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவதை ஆழ்ந்த வேதனை தருகிறது. 29.7.2025 அன்று காலை இராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் ஒரு இயந்திர மயமாக்கப்பட்ட படகுடன் சிறை பிடிக்கப்பட்டதையும், மற் றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப் பட்ட நாட்டுப்படகுடன் இலங் கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை வருத் தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இந்தச் சம்பவங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சி யாக நடைபெற்றுள்ளது. அச்சம்ப வத்தில் நான்கு மீனவர்கள் ஓர் இயந்திரமயமாக்கப்பட்ட படகுடன் இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவம் ஆகும். இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் மனரீதியான மற்றும் பொருளாதார நெருக்கடியையும், வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்.

உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் பிடியில் உள்ள அனைத்து மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *