பூமியிலும் விண்வெளியிலும் வாழக்கூடிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் ஆக்சிஜன், காற்று மற்றும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மனிதர்களுக்கு ஏற்ற இடம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும், அங்குள்ள வெற்றிடம், அண்ட கதிர்வீச்சு மற்றும் கடுமையான குளிர் மற்றும் கடுமையான வெப்பம் ஆகியன உயிரினங்களுக்கு சேதத்தை விளைவிக்கும்.ஆனால், இந்த கடினமான சூழ்நிலைகளிலும் கூட வாழக்கூடிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில், பூமியிலும் விண்வெளியிலும் உயிர் வாழும் உயிரினங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டார்டிகிரேட்: கடந்த 2007ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் டார்டிகிரேட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். அந்த உயிரினம் மீண்டும் பூமிக்கு உயிருடன் திரும்பியுள்ளது. அவை தங்களை ஒரு சிறப்பு கிரிப்டோபயோசிஸ் நிலைக்கு எடுத்து செல்வதால் அவை பல ஆண்டுகளாக சாப்பிடாமல் கூட உயிர் வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சி: கடந்த 2007ஆம் ஆண்டில், ரஷ்யாவின் ஃபோட்டான்-எம்3 விண்வெளிப் பயணத்தின் போது கரப்பான் பூச்சி முட்டைகள் விண்வெளி கதிர்வீச்சில் வைக்கப்பட்டன. இதன் விளைவாக முட்டைகள் பாதுகாப்பாக குஞ்சு பொரித்து கரப்பான் பூச்சிகள் உயிருடன் இருந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
நெமடோட் புழு: நெமடோட் புழு எனப்படும் சிறிய பூச்சிகளை நாசாவின் கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டில் மிஷன் மூலம் விண்வெளிக்கு அனுப்பட்டது. அப்போது அங்கு விபத்தும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறிய புழுக்கள் அவற்றை தாண்டி உயிருடன் இருந்துள்ளன.
உப்பு இறால்: பொதுவாக உப்பு இறால் முழுமையாக காய்ந்த பிறகும் உயிர்வாழும். இதனால் விண்வெளிக்கு அனுப்பிய போதும் அங்கு குஞ்சு பொரித்து உயிர் வாழ்ந்துள்ளன.
பழ ஈக்கள்: விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினங்கள் பழ ஈக்களாகும். அமெரிக்கா கடந்த 1947ஆம் ஆண்டில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்பியது. அங்குள்ள நுண் ஈர்ப்பு மற்றும் கதிர்வீச்சின் விளைவுகளை தெரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் இந்த உயிரினத்தை பயன்படுத்தியுள்ளனர்.