ஜெயங்கொண்டம், ஜூலை 31- பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிப்படிப்பினை மட்டும் கற்காமல் பழந் தமிழர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலகை கண்டறியவும் கல்விச் சுற்றுலா கல்வியுடன் இணைந்து புது அனுபவத்தை தருகிறது.
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு (30.07.2025) அன்று கல்வி சுற்றுலா சென்றனர். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றான சரஸ்வதி மகால் நூலகத்திற்குச் சென்று அங்கு இடம் பெற்றிருந்த நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களையும் கண்டு மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை பூங்காவிற்கு சென்றனர். அங்குள்ள பூச்செடிகள் கொடிகள் கொண்ட அழகான தோட்டத் தையும், பசுமையான புல்வெளி களையும் கண்டு மனம் மகிழ்ந்தனர்.
மேலும் (STEM PARK) சென்று கணிதமும் அறிவியலும் சார்ந்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
மாணவர்கள் பாது காப்பான முறையில் சென்று வருவதற்கு போக்குவரத்து, உணவு போன்ற வசதிகளை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்ததை பெற்றோர்கள் மிகவும் பாராட்டினார்கள்.