ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி சுற்றுலா

1 Min Read

ஜெயங்கொண்டம், ஜூலை 31- பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிப்படிப்பினை மட்டும் கற்காமல் பழந் தமிழர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலகை கண்டறியவும் கல்விச் சுற்றுலா கல்வியுடன் இணைந்து புது அனுபவத்தை தருகிறது.

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு (30.07.2025) அன்று கல்வி சுற்றுலா சென்றனர். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றான சரஸ்வதி மகால் நூலகத்திற்குச் சென்று அங்கு இடம் பெற்றிருந்த நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து சிவகங்கை பூங்காவிற்கு சென்றனர். அங்குள்ள பூச்செடிகள் கொடிகள் கொண்ட அழகான தோட்டத் தையும், பசுமையான புல்வெளி களையும் கண்டு மனம் மகிழ்ந்தனர்.

மேலும் (STEM PARK) சென்று கணிதமும் அறிவியலும் சார்ந்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

மாணவர்கள் பாது காப்பான முறையில் சென்று வருவதற்கு போக்குவரத்து, உணவு போன்ற வசதிகளை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்ததை பெற்றோர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *