வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் கபடிப் போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை

1 Min Read

வெட்டிக்காடு,ஜூலை 30– வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 28.07.2025 அன்று நடைபெற்ற குறுவட்ட அளவிலான கபடிப் போட்டி அனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் பெரியார் பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாக கலந்து கொண்டனர். 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் என இரு குழுக்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவிகள் குழு வட்டார அளவில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்து மாவட்ட அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு மகிழ்ச்சி அடைந்து முதல் பரிசு பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியையும், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *