ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய 

முக்கிய செய்திகள்

11.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது ஏன்?  நீங்கள் நெருப்போடு விளையாடுகிறீர்கள் என நீதிபதிகள் கண்டனம். ஒன்றிய அரசுக்கு விளக்கம் அளிக்க தாக்கீது.

* மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு, கருநாடகா மாநில முதலமைச்சர் சித்தாராமையா தெலங்கானாவில் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வேலை வாய்ப்புகள், ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் சிறந்த கல்வி போன்ற மூன்று மடங்கு தேவை என்று கருதும் பீகாரின் ஜாதிவாரி கணக்கெடுப்பின் தாக்கங்களை மய்யமாகக் கொண்டு ஒரு இயக்கத்தைத் தொடங்க சி.பி.அய்.(எம்.எல்) அமைப்பு திட்டம்.

* வரலாறு மாற்றப்படுகிறது. இன்று உலகில் நடந்து கொண்டிருக்கும் கொடூரமான போரில் இந்தியா கைகோர்த்து நிற்கும் நாடு என்பதை நினைத்து வெட்கப்படு கிறேன் என்கிறார் மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப்.

தி டெலிகிராப்:

* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத் தில் பிரதமர் மோடியை குறிவைத்து ராகுல் காந்தி, சமூக நீதி இல்லாமல் இணக்கமான சமுதாயம் சாத்தியமில்லை என ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *