மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

1 Min Read

புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் மற்றும் பக்த சரண்தாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து பேசிய அவர்கள், “மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பா.ஜ.க.வின் ‘பிளவு அரசியலின்’ விளைவு. மாநில அரசின் உளவுத்துறையின் தோல்வியின் விளைவும் கூட” என கூற்றம் சாட்டினர். தொடர்ந்து அவர்கள், “100-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு பின் மணிப்பூரைப் பற்றி பிரதமர் ஏன் எதுவும் கூறவில்லை? ‘மணிப்பூரின் குரல்’ என்ன ஆனது? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு விடுத்த வேண்டுகோள் ஏன் முற்றிலும் தோல்வியடைந்தது?” என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், “பிரதமர் தனது மவுனத்தைக் கலைத்து, மணிப்பூர் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், மாநிலத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும். மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் தேசிய அனைத்துக் கட்சிக் குழுவை அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *