மதக் கலவரம் தூண்டிய பா.ஜ.க. செயலாளர் கைது

1 Min Read

காஞ்சிபுரம், ஜூன் 13   “இசுலாமிய வழிபாட்டுத்தலம் ஒன்றில் காணிக்கை” எண்ணும் காணொலியை “ஹிந்து கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கும் இசுலாமியர்” என்று கூறி செல்வம் என்பவர் பரப் பினார். இது தொடர்பாக பதட்டம் ஏற்பட்ட நிலையில் இந்த போலி வீடியோவை பகிர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளரை காவல் துறையினர் கைது செய்தனர்  காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளராக இருப்பவர் செல்வம். 

இவர் சமீபத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் பங்களாதேஷில் உள்ள இசுலாமியர் வழிபாட்டுத்தலத்தில் காணிக்கை எண்ணும் நிகழ்வு பதியப் பட்டு இருந்தது. 

 இந்த காணொலியின் கீழ் அவர் “இதோ நம் ஹிந்துக்கள் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கைகளை இசுலாமி யர்கள் கொள்ளை அடிக்கின்றனர் “இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இசுலாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பதட்டம் ஏற்படும் சூழல் நிலவியது. இதனை அடுத்து வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறை யினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *