சீனாவின் பதிலடி!

Viduthalai
2 Min Read

பெய்ஜிங், ஜூன் 13  இந்தியாவில் உள்ள சீன ஊடகவியலாளர்களின் விசாவை நீடிக்க இந்திய அரசு மறுத்துவிட்டதால் சீன அரசு தங்கள் நாட்டில் உள்ள இந்திய ஊடகவியலாளரை  நாட்டைவிட்டு இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளது.  ஆசியப் பொருளாதாரத்தில் இருபெரும் சக்தி களாக இந்தியா. சீனா விளங்குகின்றன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு நிலவி வருகிறது. சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி மற்றும் சீனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய இரு பத்திரிகை யாளர்களின் விசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை ஒன்றிய அரசு நிராகரித்திருந்தது. இது  இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே விரிசலை மேலும் அதிகரிக்கும் விதமாக உள்ளது..

இதற்கு எதிர்வினையாக இந்திய பத்திரிகையாளரை வெளியேற்ற சீன அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா(பிடிஅய்) செய்தியாளர் இந்த மாதத்துக்குள் நாட்டை விட்டு வெளி யேறுமாறு சீன அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளதாக தகவலறிந்த வட் டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஊடகங்கள் சார்பில்நான்கு செய்தியா ளர்கள் இருந்தனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் கடந்த வார இறுதியில் வெளியேறினார். அதே சமயம், இந்திய அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி மற்றும் தி இந்து செய்தித்தாளின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு விசா முடி வடைந்த நிலையில் அதனை புதுப்பிக்க சீன அரசுகடந்த ஏப்ரல் மாதம் மறுத்துவிட்டது.  இந்த நிலையில், பெய்ஜிங்கில் இந்திய ஊடகத்துறை சார்பில் கடைசியாக உள்ள பிடிஅய் நிறுவனத்தின் செய்தியாளரையும் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்று சீனா கெடு விதித் துள்ளது. கடந்த மாதம், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இந்தியாவில் ஒரே ஒரு சீனப் பத்திரிகையாளர் எஞ்சியுள்ள தாகவும், அவரும் இன்னும் விசாவை புதுப்பிப்பதற்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். 

தங்களது நாட்டு  பத்திரிகையாளர்களின் விசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை இந்திய ஒன்றிய அரசு நிராகரித்திருந்தது இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே பெய்ஜிங்கில் உள்ள கடைசி இந்திய ஊடகவியலாளரையும் வெளியேற்ற சீனா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *