மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டலா? உடனடி நடவடிக்கை அவசியம்

1 Min Read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள், பகல்காம் தாக்குதல் தொடர்பாக மக்களவையில், பா.ஜ.க. அரசை விமர்சித்துப் பேசியதற்காக அவருக்குத் தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஜனநாயகத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், இந்திய நாடாளு மன்றத்தில் பேசியதற்காகக் கொலை மிரட்டல் விடுக்கப்படு கிறதென்றால், அது யாருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் – ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கா அல்லது நாடாளுமன்ற ஜனநாயத்துக்கா?

மிரட்டல் விடுத்தவர்கள் எவராயினும், அவர்கள்மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் முற்போக்காளர்கள் அஞ்சுவதில்லை என்பதை மிரட்டல் விடுத்த கயவர்கள் உணரட்டும்!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
30.7.2025  

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *