புதுவையில் நடைபெற்ற கல்வி வள்ளல் காமராசர் – கவியரங்கம்

1 Min Read

27.7.2025 அன்று காலை புதுவை அரசு ஊழியர் சம்மேளனம் அரங்கில் இலக்கிய சோலை தமிழ் மன்றத்தின் 86ஆம் நிகழ்வு நடைபெற்றது. கவிஞர் மதன் வரவேற்றார். பாவலர் வடுகை கண்ணன் தலைமை உரை ஆற்றினார். பாவலர்கள் ஞானசேகரன், பாரதி, குமரவேலு முன்னிலை வகித்தனர். படைப்பாளி பைரவி தலைமையில் “கல்வி வள்ளல் காமராசர்” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர். கவிதாயினி ஈஸ்வரி செந்தில் திருக்குறள் உரை ஆற்றினார். பேராசிரியர் ரேவதி “பெருந்தலைவரின் பேராற்றல்” என்னும் தலைப் பில் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் பத்மநாபன் தொகுப் புரை வழங்கினார். கவிஞர் காசி முனியன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *