27.7.2025 அன்று காலை புதுவை அரசு ஊழியர் சம்மேளனம் அரங்கில் இலக்கிய சோலை தமிழ் மன்றத்தின் 86ஆம் நிகழ்வு நடைபெற்றது. கவிஞர் மதன் வரவேற்றார். பாவலர் வடுகை கண்ணன் தலைமை உரை ஆற்றினார். பாவலர்கள் ஞானசேகரன், பாரதி, குமரவேலு முன்னிலை வகித்தனர். படைப்பாளி பைரவி தலைமையில் “கல்வி வள்ளல் காமராசர்” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர். கவிதாயினி ஈஸ்வரி செந்தில் திருக்குறள் உரை ஆற்றினார். பேராசிரியர் ரேவதி “பெருந்தலைவரின் பேராற்றல்” என்னும் தலைப் பில் சிறப்புரை ஆற்றினார். கவிஞர் பத்மநாபன் தொகுப் புரை வழங்கினார். கவிஞர் காசி முனியன் நன்றி கூறினார்.