பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல்: பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 13 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி மேடவாக்கம் வடக்குப்பட்டு சாலை பாவலரேறு தமிழ் களம் அரங்கில் 11.6.2023 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.

இறை பொற்கொடி தலைமை தாங்கினார். முனைவர் குணத்தொகை வரவேற்புரை ஆற்றினார். மா.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். சொல்லாய்வு அறிஞர் ப. அருளி சிறப்புரை ஆற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் , மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வாலாஜா வல்லவன், பேராசிரியர் ஜெயராமன், கன குறிஞ்சி, நில நிலவழகன், பாவெல், நிலவன் சீராளன், சின்னப்பா தமிழர், தாமரை கோ ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர் பொழிலன் நன்றி கூறினார்.

நிகழ்வில் வடலூர் கழக செயலாளர் குணசேகரன், திருவொற்றியூர் சேகர், திருச்சி இளங்கோ, பெரியார் மாணாக்கன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *