தஞ்சாவூர் ஒன்றியம் தோறும் கிளைகள் தொடங்க கும்பகோணம் கழக மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

அரசியல்

பாபநாசம், ஜூன் 13 திராவிடர் தொழிலாளரணி தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டங்களின் சார்பாக பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி (திருக்கரு காவூர் சாலையில்) பாபநாசத்தில் 11. 06. 2023 அன்று மாலை 7 மணி அளவில் நடை பெற்றது.

திராவிடர் தொழிலாளரணியின் மாநில பேரவை செயலாளர் குடந்தை. க.குருசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும், கழக பொதுக்குழு மற்றும் மாநில திராவிடர் தொழிலாளரணி மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்தும் திராவிடர் தொழிலாளரணியின் கும்ப கோணம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒன்றியங்கள் தோறும் பொறுப்பாளர்களை நியமிக்க வேண் டும் என்றும், அமைப்புசாரா தொழிலாளர் அணியின் உறுப்பினர்களை எவ்வாறு சேர்ப் பது, அணியினை கட்டமைப்பது என்பதையும் விளக்கியும், அதனை தீர்மானமாக நிறை வேற்றி மாநில தொழிலாளரணியின் செய லாளர் மு.சேகர் நோக்கஉரை நிகழ்த்தினார்.

தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு. நிம்மதி, குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு ஆகியோர் நிகழ்ச் சிக்கு முன்னிலை வகித்து உரை நிகழ்த் தினார்கள்.

குடந்தை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சோழபுரம் ஜில்ராஜ், செயலாளர் உமையாள்புரம் கோவி. கண்ணன், துணைத் தலைவர் குமாரமங்கலம் சங்கர், துணைச் செயலாளர் வலங்கைமான் பெரியார் தினேஷ், மாவட்ட அமைப்பாளர் திருநாகேஸ்வரம் சிவகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சா.சந்துரு, செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், அமைப்பாளர் மு ரமேஷ், துணைத் தலைவர் மா. முருகேசன், குடந்தை நகர மகளிர் அணி தலைவர் அம்பிகா, குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் எம். திரிபுரசுந்தரி ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கும்பகோணம் மாவட்ட திராவிடர் தொழி லாளரணியின் செயலாளர் கோவி. பெரியார் கண்ணன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

கபிஸ்தலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு, பெரியாரியல் பயிற்சி வகுப்புக்கு கிளைகள் தோறும் அதிகமான புதிய மாண வர்களை தேர்வு செய்து பங்கேற்க செய்தல், தொழிலாளரணி தீர்மானங்களைச் செயல் படுத்துதல், கிளைகளை உருவாக்குதல், உறுப்பினர் சேர்த்தல், சந்தா திரட்டுதல், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தொழிலாளர் நலச் சங்கத்தின் தொடர்பு முகவரியுடன் பெயர் பலகை வைத்தல் உள்ள ஏழு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *