கழகத் தோழருக்கு வாழ்த்து

2 Min Read

 

திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ,தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், இரா.வீரக்குமார், ஏ.வி.என் குணசேகரன், சாமி. கலைச்செல்வன், அ.கலைச்செல்வி, அ.பெரியார்செல்வன், பொன்னாப்பூர் திருநாவுக்கரசு ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

– – – – –

திருமங்கலம் கப்பலூர்
கலை, அறிவியல் கல்லூரி முன்பு மாணவர் கழகம் பரப்புரை

மதுரை புறநகர் மாவட்ட, திராவிட மாணவர் கழகம் (DSF), இளைஞரணி சார்பாக கல்லூரி மாணவ – மாணவிகளை சமூக நீதி காக்கும் திராவிட மாணவர் கழகத்தில் இணைய வேண்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான திருமங்கலம் கப்பலூர் கலை அறிவியல் கல்லூரி முன்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு பரப்புரை செய்யப்பட்டது!

இதில்  மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் ம.ரஞ்சித்குமார், மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் பா.சதீஸ்குமார், இளைஞரணி துணை தலைவர் மு.முத்துப்பாண்டி, திராவிட மாணவர் கழக துணை செயலாளர் ச.அறிவுச்செல்வி, மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.கலைச்செல்வி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் பங்கேற்ற கப்பலூர் அரசுக் கல்லூரி, சவுராஷ்ட்ரா கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளில் பரப்புரை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

– – – – –

கல்வி வள்ளல் காமராசர் கொள்கை வழி திராவிட மாடல் ஆட்சி

“கல்வி வள்ளல் காமராசர் கொள்கை வழி திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின்  483ஆவது வார நிகழ்வு 26-07-2025 அன்று இரவு 07-00 மணிக்கு பாசறை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன், ஆர்.பிச்சைமணி முன்னிலையில் தி.மு.கழக தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் மா.வள்ளிமைந்தன் தலைமையில் நடைபெற்றது. பூ.இராமலிங்கம்,வழக்குரைஞர் வே.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

அரவிந்தன்,ஆறுமுகம்,கருப்பசாமி, அரிதாஸ், சுமதிமணி, புஷ்பா, அருள் விழியன், வழக்குரைஞர் துரைவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதி யாக தமிழ்மதி நன்றி கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *