தமிழர் தலைவரிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்

1 Min Read

நேற்று (27.7.2025) மாலை மருத்துவமனையிலிருந்து நலமுடன் இல்லம் திரும்பிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இரவு 7.15 மணிக்கு, தொலைப்பேசி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தொடர்பு கொண்டு, நலம் விசாரித்தார்.
இன்று (28.7.2025) நடக்கவிருக்கும் அறுவைச் சிகிச்சை பற்றிக் கேட்டறிந்து, உடல் நலம் பெற ஆசிரியருக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சர் பற்றி ஆசிரியர் எழுதிய அறிக்கையையும் (27.7.2025) படித்ததாகக் கூறினார்.

மருத்துவமனையிலிருந்து நலமுடன் முதலமைச்சர் இல்லம் திரும்பியதற்கு வாழ்த்துக் கூறியதுடன், மருத்துவமனையிலிருந்து மக்கள் பணியாற்றியதுபோலவே, சில நாட்கள் வீட்டிலிருந்தே பணி யாற்றுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தினார் ஆசிரியர் அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *