தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான நிலுவைத் தொகை ரூ.2151.59 கோடியை உடனே விடுவிக்கவேண்டும்! பிரதமரிடம் வழங்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு விவரம்!

5 Min Read

சென்னை, ஜூலை 28 – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவினை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் அளித்துள்ளது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:–

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை – நடுத்தர மக்களின் போக்கு வரத்துக்காக ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரங்கள்

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவிற்கு நேற்று முன்தினம் (26.7.2025) காலை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்புதல் அளித்திருந்தார்.

மேற்படி கோரிக்கை மனுவில் தெரி விக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வரு மாறு:

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி!

தமிழ்நாடு அரசால் 2018 ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்‌ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத் தின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. தேசியக் கல்விக்கொள்கை (NEP) 2020 முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-இன் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக் கட்ட மைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர். இந்த அளவிலான மற்றும் முக்கியத்துவ மிக்க திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, இலட்சக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியப் பிரத மர் அவர்களிடம், 2024-2025 ஆம் நிதி யாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி ஒன்றிய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்கவும், 2025-2026 ஆம் ஆண்டிற்கான முதல்தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவிக்கவும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள்!

பத்தாண்டுகளுக்கு முன்பு அனு மதிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள பல முக்கியமான இரயில் பாதை திட்டங்களான திண்டிவனம்- செஞ்சி -திருவண்ணாமலை (70 கி.மீ) ரயில் பாதை, ஈரோடு- பழனி (91 கி.மீ) ரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை  தூத்துக்குடி (60 கி.மீ) ரயில் பாதை, அத்திப்பட்டு  புத்தூர் (88 கி.மீ.) இரயில் பாதை, மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் (180 கி.மீ) இரயில் பாதை ஆகிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கேட்டும்;

87 கிமீ நீள திருவனந்தபுரம் – கன்னி யாகுமரி இரட்டை பாதை பணியினை விரைவு படுத்திடவும், திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளித்திடவும், கோயம்புத்தூர்- பல்லடம்- கரூர், கோயம்புத்தூர்- கோபிசெட்டிபாளையம்- பவானி-சேலம், மதுரை- மேலூர்- துவரங்குறிச்சி- விராலி மலை- இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங்க ளுக்கு வழித்தட ஆய்வு /விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் கோரியும்;

சென்னை பெருநகரப் பகுதியில் புறநகர் ரயில் சேவைகளை உச்ச நேரங்களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைத்திடவும், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத மின்சார ரயில் பெட்டிகளை (EMU) கூடுதலாக ஒதுக்கீடு செய்திடவும், முக்கிய புறநகர் வழித்தடமான தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான 4 ஆவது வழித்தடத்தை அனுமதித்து செயல்படுத்திடவும், ஆவடி – சிறீபெரும்புதூர் ரயில் பாதைதிட்டத்தை விரைவாக செயல்படுத்திடவும், விரை வான ஒப்புதல்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் மற்றும்
மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்!

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம்- 34.8 கி.மீ.க்கு ரூ.10,740.49 கோடியிலும் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் – 32 கி.மீ.க்கு ரூ.11,368.35 கோடியிலும் கட்டி முடிப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது.

மெட்ரோ ரயில் கொள்கை- 2017 இன்படி, ஒன்றிய அரசும் மற்றும் தமிழ்நாடு அரசும், 50:50 சம பங்களிப்பு அடிப்படையில், இரு திட்டங்களையும் இணைந்து செயல்படுத்துவதற்கான, ஒப்புதலையும் நிதியுதவியையும், விரைந்து வழங்கிட, ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமர் அவர்களை, முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காணுதல். அண்மைக் காலமாக, இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரு கிறது. இந்தத் தொடர்ச்சியான கைதுகள் மாநிலத்தில் உள்ள ஏழை மீனவக் குடும்பங்க ளின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்து வருகிறது.

இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறைஅமைச்சர் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பலமுறை கடிதங்களைஎழுதியுள்ளார். தூதரக நடவடிக்கைகள் மூலம் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இலங்கைஅரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.

இந்த சிக்கலானப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இந்தியப் பிரதமர் அவர்கள், இதில் தனது நேரடி கவனத்தை செலுத்தும்படி முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க கோருதல்

2018-2019 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை பெருவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1971–1975 காலகட்டத்தில், சேலம் உருக்காலை அமைப்பதற்காக 3973.08 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதில் 1503.44 ஏக்கர் நி%