முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி

1 Min Read

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை
பிரதமர் மோடியிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, ஜூலை 27 ​முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்கினார்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லினுக்கு நடைப்ப​யிற்​சி​யின் போது தலைசுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்கப்​பட்​டார். அங்கு அவரை 3 நாள்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். இதையடுத்​து, தொடர் சிகிச்​சை​யில் மருத்​து​வ​மனை​யில் முதலமைச்சர் இருந்து வரு​கிறார். இருப்​பினும், அரசு மற்​றும் கட்சி தொடர்பான ஆலோ​சனை​களை தொடர்ந்து மருத்​து​வ​மனை​யில் இருந்தே மேற்கொண்டு வரு​கிறார். முதலமைச்சரை, குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், தலை​மைச் ​செயலாளர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தொடர்ந்து சந்​தித்துப் பேசி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க தமிழ்நாட்டிற்கு வந்​துள்​ளார். முதலமைச்சர் அவரை சந்​திக்க இயலாத நிலை​யில், தமிழ்நாட்டின் வளர்ச்​சித் திட்​டங்​கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் முதலமைச்சரை சந்​தித்துப் பேசி​னார்.
தொடர்ந்​து, தயாரிக்​கப்​பட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை முதலமைச்சரிடம் அதி​காரி​கள் அளித்து அவரின் ஒப்​புதலை பெற்​றனர். இந்த சந்​திப்​பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனி​மொழி​யும் உடன் இருந்​தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்கினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *