முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி

1 Min Read

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை
பிரதமர் மோடியிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, ஜூலை 27 ​முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்கினார்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லினுக்கு நடைப்ப​யிற்​சி​யின் போது தலைசுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்கப்​பட்​டார். அங்கு அவரை 3 நாள்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். இதையடுத்​து, தொடர் சிகிச்​சை​யில் மருத்​து​வ​மனை​யில் முதலமைச்சர் இருந்து வரு​கிறார். இருப்​பினும், அரசு மற்​றும் கட்சி தொடர்பான ஆலோ​சனை​களை தொடர்ந்து மருத்​து​வ​மனை​யில் இருந்தே மேற்கொண்டு வரு​கிறார். முதலமைச்சரை, குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், தலை​மைச் ​செயலாளர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தொடர்ந்து சந்​தித்துப் பேசி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க தமிழ்நாட்டிற்கு வந்​துள்​ளார். முதலமைச்சர் அவரை சந்​திக்க இயலாத நிலை​யில், தமிழ்நாட்டின் வளர்ச்​சித் திட்​டங்​கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் முதலமைச்சரை சந்​தித்துப் பேசி​னார்.
தொடர்ந்​து, தயாரிக்​கப்​பட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை முதலமைச்சரிடம் அதி​காரி​கள் அளித்து அவரின் ஒப்​புதலை பெற்​றனர். இந்த சந்​திப்​பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனி​மொழி​யும் உடன் இருந்​தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *