மறைவு

1 Min Read

பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் ஆற்றல்மிகு களப்போராளி முடிகொண்டான் பி.செகநாதன் (வயது 90) இன்று (27.07.2025) அதிகாலை மறைவுற்றார்  என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நன்னிலம் ஒன்றிய கழக தலைவர் இரா.தன்ராஜ் மற்றும் கழகத் தோழர்கள் பி.செகநாதன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நன்னிலம் அருகிலுள்ள அவருடைய சொந்த ஊரான முடிகொண்டானில்  நடைபெற்றது.

– – – – –

தஞ்சை மாநகர கழக பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசனின் மூத்த சகோதரர் வழக்குரைஞர் மைதீன்பாட்சா (வயது 63) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து 25.7.2025 அன்று மாலை 6.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நிறைவுற்றது.

தொடர்புக்கு: கவிஞர் பகுத்தறிவுதாசன், 7402238360

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *