பெங்களூரு, ஜூன் 14 – 2013-2018க்கு இடையில் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது இந்திரா கேன்டீன்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. தற்போதுள்ள கேன்டீன்களுக்கு புத்துயிர் அளித்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது.
இந்நிலையில் இந்திரா கேன் டீன் சேவை மற்றும் அதன் நிர் வாகம் தொடர்பாக உயர் அதிகா ரிகளுடன் முதலமைச்சர் சித்தரா மையா ஆலோசனை நடத்தினார்.
“இந்திரா கேன்டீன்களை மீண் டும் தொடங்குவது குறித்து ஆலோசித்துள்ளோம். ஒவ்வொரு வார்டி லும் (பெங்களூருவில்) ஒரு இந்திரா கேன்டீன் திறக்கப்பட வேண்டும். பெங்களூரு நகரில் குறைந்தபட்சம் 250 இந்திரா கேன்டீன்களை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்” என்று சித்தராமையா கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறி னார்.
தற்போது வரை மாநகராட்சி 70 சதவீத செலவை ஏற்றுக் கொண்டதாகவும், மீதமுள்ள 30 சதவீதத்தை அரசு எடுத்துக் கொண்ட தாகவும், ஆனால் இனிமேல் இரு நிறுவனங்களும் தலா 50 சதவீதத்தை ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
“பெங்களூருவைத் தவிர மற்ற இடங்களில், 70 சதவீத செலவை அரசு ஏற்கும், மீதமுள்ள 30 சதவீ தத்தை உள்ளூர் சிவில் ஏஜென்சிகள் ஏற்கும்,” என்று சித்தராமையா கூறினார், புதிதாக கேன்டீன்கள் திறக்கப்பட வேண்டிய இடங்க ளின் பட்டியலைக் கேட்டுள்ளார்.
புதிய டெண்டர்கள் அழைக்கப் படும் என்று குறிப்பிட்ட முதல்வர், அதன்பிறகு மெனுவும் மாற்றப் படும் என்றார். அளவு, தரம், தூய்மை உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் கூறுகையில், ‘இந் திரா கேன்டீன்களை பார்வை யிட்டு, விற்பனை நிலையங்களின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேவையான இடங்களில் பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் கேன்டீன்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும், உணவு தரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மெனுவை வடக்கு கருநாடகாவில் உள்ளூர் உணவை வழங்க அறிவுறுத்தல்களுடன் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.
கல்லூரிகள், மருத்துவமனை கள், பேருந்து நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் புதிய இந்திரா கேன்டீன் கள் அமைப்பதற்கான முன்மொழிவு களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப் பட்டது. அதிகாரிகள், தரவுகளை மேற் கோள்காட்டி, பெங்களூரில் 175 கேன் டீன்கள் உள்ளன, அவற்றில் 163 செயல் படுகின்றன. கேன்டீன் களில் காலை உணவு 5 ரூபாய்க்கும், மதிய உணவு மற்றும் இரவு உணவு தலா 10 ரூபாய்க்கும் வழங்கப்படு கிறன்றன.