நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : சிவில் நீதிபதி பிரிவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : வழக்குரைஞராக இருப்பவர் பி.எல்., படிப்புக்கு பின் வழக்குரைஞர் / பிளிடர் பணியில் குறைந்தது மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மற்றவர்களுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எல்., முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2023 அடிப்படையில் வழக்குரைஞராக இருப்பவர் 25 – 42, மற்ற பிரிவினர் 25 -29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : பிரிலிமினரி எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு, வைவா வாய்ஸ்.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.100
கடைசிநாள்: 30.6.2023
விவரங்களுக்கு: npsc.gov.in