மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை!
சென்னை, ஜூன் 14- பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச் சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” நடத்தப் பட உள்ளதாக திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழ கத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழ கிரி, ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் ஆர். முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றாமல் – மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக் கிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்க ளுக்குக் கொடுத்தது அனைத் தும் கண்ணீரும் அடக்குமுறை களும் தான். இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக தலைமை.
மாநிலங்களில் நடந்த பல் வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும் – நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்தச் செல்வாக்கும் இல் லாத அரசாங்கமாக ஒன்பதாவது ஆண்டில் மொத்தமாகத் தேய்ந்து விட்டது பாஜக ஆட்சி. எனவே, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர் பாராத படுதோல்வியை அடை யப் போகிறோம் என்பதை பாஜக தலைமை உணர்ந்துவிட்டது. எனவே, தனக்கு எதிரான ஜன நாயக சக்திகளின் பலத்தைக் குறைப்பதன் மூலமாக வெற்றியை அடையலாமா என்ற இறுதித் தந்திரத்துக்குள் பாஜக தலைமை இறங்கி உள்ளது.
இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க் கைக்கான நாளாக சூன் 23-ஆம் நாள் குறிக்கப் பட்டு உள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜன நாயக சக்தி களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் – கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது. அதனை அடையாளமாக பல்வேறு மாநிலங் களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பல் வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலனாய்வு விசாரணை அமைப்புகளை குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள்மீது பயன் படுத்தாமல், தன்னுடைய அரசியல் எதிரிகள் மீது பாஜக பயன்படுத்தி வருவதை ஊடகங்கள் புள்ளி விபரங்களுடன் பல முறை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பாஜக தலைமை திருந்த வில்லை. வெளிப்படையாக – ஆணவமான முறையில் விசாரணை அமைப்புகளை அர சியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள்.
எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. தமிழ் நாடு என்பது பாஜகவை பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டும் மாநிலம். இங்கு அவர்களால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, தனியாக நின்று டெபாசிட்கூட வாங்க முடியாது என்பது தெரியும். அதனால் தான் நேர்வழி இல் லாமல் நேர்மையற்ற வழிகளில் பாஜக தனது கீழான செயல்களைச் செய்கிறது.
மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற் றைய தினம் (13.6.2023) 17 மணி நேரம் விசாரணை என்ற பெய ரால் சித்திரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அள வுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார் கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே இந்தளவுக்கு வேண் டுமென்றே தொல்லையையும், நெருக்கடியையும் கொடுத் திருப்பது பழிவாங்குவதே தவிர, விசாரணை அல்ல. மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை – அதுவும் அமைச் சரைச் சித்திரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத் துவது அரசி யலே தவிர, விசா ரணை அல்ல.
மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத் துக்குள் மத்திய பாதுகாப்புப் படை காவல் துறையினரை அழைத்து வருவது தான் மாநில ஆட்சி யின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவப் போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டு கிறார்களா? இவை எதற்கும் பயப்படுகிறவர்கள் அல்ல நாங்கள்.
மூன்று நாள்களுக்கு முன்னால்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சென்னைக்கு வந்து சென்றார். அவரது பயண நோக்கமும், பிரச் சாரக் கூட்டமும் படு தோல்வி என்பதை அனைவரும் அறி வார்கள். இதனை மறைப் பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜிமீது நடவடிக்கையை பாய்ச்சி இருக்கிறார்கள்.சொராபு தீன் என்கவுன்டர் வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தவுடன் குஜராத் உள் துறை அமைச்சராக இருந்து கொண்டே தலைமறைவான வர் அமித்ஷா என்பதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.
“Don’t Create atmosphere of fear” என்று சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதி பதிகள் அமலாக்கத்துறைக்கு எச்சரித்து இருந் தார்கள். இப் படி உச்சந்தலையில் உச்சநீதி மன்றம் கொட்டிய பிறகும் பாஜகவின் அமலாக்கத் துறை திருந்துவதாகத் தெரியவில்லை. திருத்தும் கட மையும், பொறுப்பும் நாட்டு மக்களுக்கே உண்டு.
பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கை களைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் 16.6.-2023 (வெள் ளிக்கிழமை) அன்று மாலை 5.00 மணி அளவில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ”மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம்” நடைபெறும். பாஜக வுக்கு இறுதித் தோல்வியைத் தரும் வரையில் நமது மக்கள் பிரச்சாரம் தொடரும்.
– இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.