ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசியல்

சென்னை, ஜூன் 14 ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மற்றும் பாடத்திட்டத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (13.6.2023) தொடங்கி வைத்தார். 

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்ததோடு, மாணவ- _ மாணவி களுக்கான பயிற்சி கையேட்டையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்ன சென்ட் திவ்யா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவராவ், நான் முதல்வன் போட்டி தேர்வுப் பிரிவின் சிறப்பு திட்ட இயக்குநர் சி.சுதாகரன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெயப் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண் டனர். நிகழ்ச்சியில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

என்னதான் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் தனியார் நிறுவனங் களுக்கு வேலைக்கு சென்றாலும், அரசு அலுவலகங்கள் குறிப்பாக ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியில் இருப்போரின் எண் ணிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகின்றது. ஒரு காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வந்தால் 25 முதல் 30 சதவீதம் வரை நம் முடைய தமிழ்நாட்டு தேர்வர்கள் வெல்வார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. மாறிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதே போல், ஒன்றிய அரசு அலுவலகங் களிலும் ஆண்டுக்காண்டு தமிழ் நாட்டை சேர்ந்தவர்களின் எண் ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

பல குக்கிராமங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழி பேசுப வர்களே அதிக அளவில் மேலாளர் களாக இருக்கிறார்கள். அதனால் தான் இங்கிருக்கக்கூடிய நம்முடைய பாமர மக்கள் வயதான குடிமக்கள், வங்கி சேவைகள் பெறுவதில் கொஞ்சம் சிரமப்படுகிறார்கள்.

மொழி ஒரு தடையாக இருப்ப தால் அரசு சேவை சென்றடைவதில் ஒரு தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஒன்றிய அரசு தேர்வுகளில் தமிழ்நாட்டு மாண வர்களும், அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடுதான் இதனை நான் கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி வைத்தேன்.

இந்தப் பிரிவு தொடங்கி வைக் கப்பட்ட 3 மாதங்களில் இன்றைக்கு 29 ஆயிரத்து 24 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண், பட்டப்படிப் பில் பெற்றுள்ள சதவீதம் மற்றும் இடஒதுக்கீட்டு முறையில் 6 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட் டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந் துள்ளன. அதனால் கூடுதல் பயிற்சி மய்யங்கள் அமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டுமே 3,042 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதில் இருந்து 450 பேரை தேர்வு செய்து, சென்னை மாவட்டத்தில் மட்டும் 3 பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட உள்ளன. அதில் ஒரு தேர்வு மய்யம் தான் தற்போது நாம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளோம்.இவ் வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *