கொள்கை வீரர் என்.ஆர்.சாமியின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

1 Min Read

காரைக்குடி ஜூலை 26- சுயமரியாதை சுடரொளி என்.ஆர்.சாமி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாளான நேற்று (26.7.2025) மாலை காரைக்குடி பெரியார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கல்லல் ஒன்றிய தலைவர் கொரட்டி வீ.பாலு, தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், தேவகோட்டை நகர ப.க.அமைப்பாளர் சிவ.தில்லைராசா, தேவகோட்டை ஒன்றிய அமைப்பாளர் ஜோசப்,குறள் நெறி தொண்டர் சுப.பரமசிவம், ஏ.அய்.டி.யூ.சி. மாநிலக்குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன், சி.பி.அய்.தோழர் கண்ணன், கிராம நிருவாக அலுவலர் சங்க மாநில தலைவர் இரா.போசு, தேவகோட்டை செ.க. குமணன், சூரக்குடி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வந்திருந்தோரை மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, தி.செயலெட்சுமி, தி.என்னாரெசு பிராட்லா, தி.புரூனோ என்னாரெசு, பு.ரம்யமலர், தி.தமிழ்ச்செல்வி, பெரியார் பிஞ்சுகள் ர.பு.சித்தார்த்தன், ர.பு.கவுதமன் ஆகியோர் வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *