ஜூன் 15இல் திருப்பத்தூரில் “முப்பெரும் விழாக்கள்!”

Viduthalai
2 Min Read

திருப்பத்தூர், ஜூன் 14- திருப்பத் தூரில் இரு பெரும் – முப்பெரும் விழாக்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்று கிறார்.

காலை நிகழ்வு

காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை, திருப் பத்தூர் ரோட்டரி சங்கம் மற் றும் சுயமரியாதை சுடரொளி கே.கே.சின்னராசு குடும்பத்தி னர் ஏற்பாட்டில் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனை யில் 15.6.2023 காலை 11 மணிக்கு சுயமரியாதை சுடரொளி கே. கே.சின்னராசு  நினைக்கூடம் திறப்புவிழா, ரோட்டரி ஆம் புலன்ஸ் வழங்கும் விழா, சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ) திறப்பு விழா சுகாதாரப்பணி இணை இயக்குநர் டாக்டர் கே.மாரிமுத்து தலைமையில் நடைபெறுகிறது. தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கே.டி.சிவக்குமார் வரவேற் கிறார். மேனாள் அமைச்சர் கே.சி.வீரமணி, காமராஜர் நூற் றாண்டு நினைவு அறக்கட்ட ளைத் தலைவர் பி.கணேஷ்மல், திருப்பத்தூர் ரோட்டரி சங்கத் தலைவர் பி.அருணகிரி ஆகி யோர் முன்னிலையில் திட்ட அறிக்கையை கே.சி.எழிலரசன் வாசித்தளிக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுயமரி யாதை சுடரொளி கே.கே.சின்ன ராசு நினைவுக் கூடத்தை திறந்து வைக்கிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ரோட்டரி ஆம்புலன்ஸ் வாக னத்தைத் தொடங்கி வைக் கிறார்.

ரோட்டரி சங்க டிஜிஇ பி. பரணிதரன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் (ஆர்.ஓ) தொடங்கி வைக்கிறார்.

மாலை நேர நிகழ்வு

திருப்பத்தூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா, விடுதலை நாளிதழ் 89ஆம் ஆண்டு விழா மற்றும் பகுத் தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சி.தமிழ்செல்வன் பணிநிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா 15.6.2023 அன்று மாலை 5.30 மணிக்கு திருப்பத்தூர் விஜய சரவண மகாலில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் வரவேற்கிறார். 

விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி புத்தகத்தை அறிமுகம் செய்து கழகப்பொதுச்செயலா ளர் முனைவர்  துரை.சந்திரசேக ரன் உரையாற்றுகிறார்.

பழ பிரபு (தலைமை கழக அமைப்பாளர்), அகிலா எழில ரசன் (மாநில மகளிரணி பொரு ளாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழ கம்).

வேலூர் வி.அய்.டி. பல் கலைக்கழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி புத்தகத்தை வெளி யிட்டு கருத்துரை ஆற்றுகிறார்.

நிறைவாக திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முப்பெரும் விழா சிறப்புரை ஆற்றுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆம்பூர் விசுவ நாதன், திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜ், திருப்பத்தூர் ஏ.நல்லதம்பி, மாவட்ட ஆவின் பெருந்தலை வர், திமுக நகர செயலாளர் எஸ்.இராஜேந்திரன் உள் ளிட்ட திருப்பத்தூர் நகரின் கட்சிகள், அமைப்புகளின் தலை வர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

நகரத் தலைவர் து.காளி தாஸ் நன்றி கூறுகிறார்.

விழாவில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம், இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு அணி களின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *