நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 25- தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இதழியலைத் தொழிலாகத் தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்க அரசின் சார்பிலேயே சென்னை இதழியல் நிறுவனத்தைத் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாகக் குழுத் தலைவா்

அதன்படி, நிகழ் கல்வியாண்டு முதல் சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதழியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக தி இந்து குழுமத்தின் இயக்குநரும் தி இந்து நாளிதழின் மேனாள் தலைமை ஆசிரியருமான என்.ரவியும், தலைமை இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீா் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *