சென்னை, ஜூலை 25- தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இதழியலைத் தொழிலாகத் தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்க அரசின் சார்பிலேயே சென்னை இதழியல் நிறுவனத்தைத் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாகக் குழுத் தலைவா்
அதன்படி, நிகழ் கல்வியாண்டு முதல் சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதழியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக தி இந்து குழுமத்தின் இயக்குநரும் தி இந்து நாளிதழின் மேனாள் தலைமை ஆசிரியருமான என்.ரவியும், தலைமை இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீா் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.