தமிழ்நாடு செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு இடஒதுக்கீடு சான்றிதழ்களை பதிவேற்ற ஆகஸ்ட் 7 கடைசி நாள்!

1 Min Read

சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட மாநில தகுதித் தேர்வு (செட்) கடந்த மார்ச் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு (PSTM  Persons Studied in Tamil Medium) இடஒதுக்கீடு வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வோர் மட்டுமே தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோர முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *