மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை சூரியன் மீன் விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு

1 Min Read

ராமநாதபுரம், ஜூலை 25- பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் சுமார் 8 கிலோ எடை கொண்ட அரிய வகை சூரியன் மீன் ஒன்று சிக்கி இருந்தது. இந்த மீனுக்கு வால் இல்லாமல் வெறும் துடுப்பு மட்டுமே இருந்தது.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, “ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இந்த மீனை காணலாம். இது வலையில் சிக்குவது மிகவும் அரிது. அதிவேகமாக நீந்தும் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் இந்த மீனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். காற்று அதிகம் வீசும் பருவ நிலைகளில் இந்த மீன் வலையில் கிடைக்கும்.

இந்த மீன் வலையில் சிக்கியது குறித்து அறிந்த மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் வந்து ஆராய்ச்சிக்காக இந்த மீனை எடுத்து சென்றுள்ளனர். அவர்களிடம் அந்த மீனை ஒப்படைத்து விட்டோம்” என்று கூறினார். இதேபோல் மற்றொரு படகின் மீனவர்கள் வலையில் நரி மீன் என்று சொல்லக்கூடிய சுமார் 8 கிலோ எடை கொண்ட 2 மீன்கள் சிக்கின.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *