பக்தர்கள் பலி தொடர்கதையா? பாதயாத்திரை கூட்டத்தில் வாகனம் புகுந்து இரண்டு பெண் பக்தர்கள் பலி ‘கடவுள் காப்பார்’ என்று நம்புபவர்கள் சிந்திக்கட்டும்!

1 Min Read

ராமநாதபுரம், ஜூலை 25- பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.

பாதயாத்திரை சென்ற பெண்கள்

‘ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி சாந்தி (வயது 50). அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய மனைவி புவனேசுவரி(40). 23.7.2025 அன்று மாலையில் அப்பகுதியை சேர்ந்த 18 பெண்கள் திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட் டனர்.நேற்று அதிகாலையில் இவர்கள் உப்பூரை அடுத்த நாகனேந்தல் விலக்கு ரோடு அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பெண் பக்தர்கள் குழு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த சம்பவத்தில் சாந்தி, புவனேசுவரி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம் பவ இடத்திலேயே பரிதாப மாக பலியாகினர். மேலும் முருகன் என்பவருடைய மனைவி நாகஜோதி (45) படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் மற்றபெண்கள் அலறினர்.   பின்னர் நாகஜோதியை பிறகு தீவிரச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *