பயணிகளின் உடல் நலத்தைப்பேணும் நியுசிலாந்து விமான நிறுவனம்

Viduthalai
1 Min Read

அரசியல்

நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனமான ஏர் நியூசிலாந்து – ஆக்லாந்து பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் செல்லும் பயணிகளின் எடையை தானியங்கி கருவி மூலம் கணக்கிடப்போவதாகக் கூறியிருக்கிறது. வரும் ஜூலை 2ஆம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும். புதிய திட்டம் பயணி எடைக் கணக்கெடுப்பு என்று அழைக்கப் படுகிறது.

விமானத்திற்கு தேவையான எடை மற்றும் அதனை சமன்படுத்தும் முறைகள் குறித்த விவரங்களைச் சேகரிப்பது அதன் நோக்கம். பயணிகளின் எடை மட்டுமல்ல, விமானத்தில் ஏற்றிச்செல்லப்படும் உணவு வகைகள், பயணப் பெட்டிகள் முதலிய வற்றின் எடையும் கணக்கிடப்படும் என்று விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

பயணிகளின் உடல் எடையை மற்றவர் களிடம் தெரிவிக்க விரும்பாத பயணிகள் வருந்தத் தேவையில்லை என்றும் அவர் களின் எடை ரகசியமாக வைத்துக் கொள்ளப் படும் என்று நிறுவனம் உறுதிகூறியது. மின் னிலக்கச் சாதனத்தின்மூலம் எடை கணக் கிடப்படும். அது சாதனத்தில் இருக்கும் திரையில் பிரதிபலிக்காது. எடையைக் கணக்கிடும் ஊழியர்கள்கூட பயணிகளின் எடையைத் தெரிந்துகொள்ளமுடியாது என்று நிறுவனம் கூறியுள்ளது.   பயணிகளின் உடல் எடையை கண்காணிப்பது என்பது அவர்களின் உடல் நலம் தொடர்புடையது. அவரது உடல் நிலைக்கு ஏற்ப உடல் எடை அதிகரித் தாலோ அல்லது குறைந்திருந்தாலோ அவ ருக்கு ஆலோசனைகள் கூறவும் விமான நிறுவனம் சிறப்பு மருத்துவர்களை நியமித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *