அகரமுதலித் திட்ட விருதுகள் ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, ஜூலை 24– தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் உள்பட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞா்கள், படைப்பாளா்களைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான தேவநேய பாவாணா் விருது (ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம்), வீரமாமுனிவா் விருது (ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்), நற்றமிழ் பாவலா் விருது(ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்), தூயதமிழ் பற்றாளா் விருது (ரூ.20,000 பரிசு) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளா் பரிசுக்கும் (ரூ.5,000 பரிசு) தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *