அரவிந்த் கண் மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி மறைந்தாரே!

1 Min Read

அரவிந்த் கண் மருத்துவ மனைகள் மூலம் மிகப்பெரும் மருத்துவத் தொண்டாற்றிய மகத்தான மருத்துவர், அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி (வயது 86) அவர்கள் இன்று காலை மறைவுற்றார் என்று அறிந்து பெரிதும் துயரமடைகிறோம். அரவிந்த் கண் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த டாக்டர் நாச்சியார் அம்மாள் அவர்களுக்கு மிகப் பெரிய ஒத்துழைப் போடு, மருத்துவச் சேவைகளை ஏழை, எளியவர்களுக்கு தொடர்ந்து வழங்கக் காரணமானவர் டாக்டர் நம்பெருமாள் சாமி அவர்கள் ஆவார்கள்.

அவருடைய இழப்பினால் பெருந் துயருக்கு ஆளாகியுள்ள மருத்துவர் டாக்டர் நாச்சியார், அவர்களது இரு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுமத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்

 

24.07.2025     
சென்னை    

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *