சிபிஅய் விசாரணைக்கு முன் அரசின் அனுமதி தேவை-தமிழ்நாடு அரசு உத்தரவு

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 15 – தமிழ்நாட்டில் சிபிஅய் அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப் பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்று மாநிலத்திற்குள் சிபிஅய் அதிகாரிகள் விசாரணை நடத் தலாம். இந்நிலையில், தமிழ்நாட்டில் சிபிஅய் விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு நேற்று (14.6.2023) ரத்து செய்துள்ளது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியையும் தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றுள்ளது.

இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் சிபிஅய் (மத்திய புலனாய்வுத்துறை) விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெற்ற பின்னரே தமிழ்நாட்டில் சிபிஅய் அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.

மேற்குவங்காளம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சிபிஅய் விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை ஏற்கெனவே திரும்பபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *