சிபிஅய் விசாரணைக்கு முன் அரசின் அனுமதி தேவை-தமிழ்நாடு அரசு உத்தரவு

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 15 – தமிழ்நாட்டில் சிபிஅய் அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப் பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்று மாநிலத்திற்குள் சிபிஅய் அதிகாரிகள் விசாரணை நடத் தலாம். இந்நிலையில், தமிழ்நாட்டில் சிபிஅய் விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு நேற்று (14.6.2023) ரத்து செய்துள்ளது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியையும் தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றுள்ளது.

இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் சிபிஅய் (மத்திய புலனாய்வுத்துறை) விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெற்ற பின்னரே தமிழ்நாட்டில் சிபிஅய் அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்.

மேற்குவங்காளம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சிபிஅய் விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை ஏற்கெனவே திரும்பபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *