விருதுநகர் சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

1 Min Read

 விருதுநகர், ஜூன் 1 – விருதுநகர் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-2024ஆம் கல்வி ஆண்டிற் கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முன்பருவ பள்ளி முதல் பிளஸ்-2 வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சமச்சீர் கல்வி போதிக்கப் படுகிறது. சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. கல்வித்துறை வழியாக கல்வி உபகர ணங்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப் படுகின்றன.

ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக காற்றோட்டம் உள்ள விடுதி வசதி உள்ளது. உணவு, உறைவிடம் மற்றும் விடுதி மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப் படுகிறது. செவித்துணை கருவிகள் மாணவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 

தற்போது 2 மடங்காக உதவி தொகை உயர்த்தப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாணவர்கள் இலவசமாக கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். இரண்டு கல்வி ஆய்வகத்தோடு மாணவர்களுக்கான கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1 முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பில் தமிழ், வணிகவியல், கணக்குப்பதிவியல், தணிக்கையியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

எனவே பெற்றோர் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி செவித்திறன் குறையுடைய தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *