மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.07.2025 அன்று சென்னை, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2023 நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்ற பதிவுத் தொகை ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மய்யம் மற்றும் ரூ.40.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 7.8.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஆயிஷா ஷாகின் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2023 நிகழ்ச்சி
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books