அமைச்சர் செந்தில் பாலாஜி கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

1 Min Read

தொல். திருமாவளவன் கண்டனம்

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஜூன் 15  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார்.  விசிக தலைவர் திருமா வளவன் அளித்த பேட்டியில், 

“பாஜக அரசை ஆதரித்து, மாநில அரசு இயங்கி வந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியையும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவையும் கொள்கை அடிப் படையில் கடுமையாக விமர்சித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், கைது நடவடிக்கை மூலம் முதலமைச் சருக்கு அச்சுறுத்தலை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற் படுத்தி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. குறிப்பாக முதலமைச்சரை அச்சுறுத் தும் நடவடிக்கை என விசிக கருதுகிறது. இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *