பக்தி என்பது பிசினஸ்தானே!

1 Min Read

தரிசனத்தில் என்ன ஏழை – பணக்காரன்; கோயில்களில் முக்கிய விருந்தினர்களுக்கு தனி தரிசன ஏற்பாடு என்பது கூடாது; வழிபாட்டில் என்ன ஏழை – பணக்காரன் என்று ஹிந்து முன்னணி கூறியுள்ளது.

அடடே இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஹிந்து முன்னணிக்கு கூட கொஞ்சம் புத்தி வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. ஹிந்து முன்னணி கூறுவது இருக்கட்டும்; அந்தக் கோயிலில் இருக்கும் கடவுள் ஏன் இந்த வேறுபாட்டை அனுமதிக்கிறார்?

இப்படி எல்லாம் தரிசனத்திற்கு வரும் மக்களை ஏழை – பணக்காரன் என்று பிரிக்கலாமா? பிரிக்கக் கூடாது என்று எந்த பக்தரின் கனவிலாவது எந்தக் கடவுள் ஆவது கூறியது உண்டா?

 விஅய்பி தரிசனம் என்றால் கொழுத்த வருமானம் அவ்வளவுதான்! 

பக்தி என்பது ஒரு பிசினஸ் தானே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *