தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் நிச்சயம் உயராது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்ட அறிவிப்பு

1 Min Read

அரியலூர், ஜூலை 23- தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் நிச்சயமாக உயராது என்று அமைச்சர் சிவசங்கர் திட்ட வட்டமாக கூறினார்.

வதந்தி

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (22.7.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தியாக பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது ஒவ்வொருமுறையும் அதனை மறுத்து வருகிறோம்.

பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை தெரிவித்து இருக்கிறார். எனவே இப்போதும் அதனை உறுதிப்படுத்துகிறோம்.

சுமை ஏற்றாது

ஏழை, எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு நிச்சயம் இருக்காது. பா.ஜனதாவின் கனவு என்ன என்பதை அன்வர்ராஜா கூறியிருக்கிறார். அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதுதான் பா.ஜனதாவின் கனவாக இருக்கிறது.

தந்திரம்

தி.மு.க.வினுடைய வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பல்வேறு புதிய கட்சிகளை ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜனதா களத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

இப்போதும்  அந்த தந்திரத்தை ஒரு புது முயற்சியாக எடுத்து இருக்கிறார்கள். வருகிற தேர்தலில் அவை அனைத்தையும் முறியடித்து தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *