அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு

Viduthalai
1 Min Read

வாசிங்டன், ஜூன் 15- அமெரிக் காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவ ணப்படத்தை ஒளிபரப்ப உள்ளதாக பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை இரு நாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002இல் நடந்த குஜராத் கல வரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தில், அப் போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவ ணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் பன் னாட்டு மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா: மோடிக்கான கேள்வி’ என்ற ஆவணப்படம், வரும் 20ஆம் தேதி அமெரிக்காவில் ஒளி பரப்பப்படும். இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்காக அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள், ஊடகவிய லாளர்கள், ஆய்வாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, ​​பிபிசி தயாரித்த ஆவணப்படம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது. அப்போது, ​​இந்தி யாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுதல் குறித்து பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *