தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, நவ.12 அரசு பள்ளிகளில், அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சமூக நலத்துறை சார்பில், காலை உணவு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால், சென்னையில் உள்ள 358 பள்ளிகளில் படிக்கும், 65,030 மாணவர்கள் பயனடை கின்றனர்.

மாநிலம் முழுதும் உள்ள, 30,995 அரசு பள்ளிகளில் படிக்கும், 18 லட் சத்து 53,595 மாணவ – மாணவியர் பயனடைகின்றனர்.

இதுகுறித்து, சமூக நலத்துறை இயக்குநர் அமுதவல்லி கூறிய தாவது:

காலை உணவு திட்டத்தால், வேலைக்கு செல்லும் ஏழைப் பெண் கள், குழந்தைகளுக்குக் காலை உணவு தயாரிக்கும் சுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு உள்ளாகவே, குழந்தைகள் பள்ளிக்கு வந்து விடு கின்றனர். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் விடுப்பு இல்லாமல், பள்ளிக்கு வந்து விடுகின்றனர். பெற் றோரும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை மேம்படுத்த, தொடர் கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளோம். ஒவ்வொரு மாவட்ட மற்றும் வட்டார அளவில், மூன்று நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட ஆட்சியர்கள் குறைந்த பட்சம் 20 மய்யங்கள்; வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குறைந்த பட்சம் 40 மய்யங்கள் வரை, மாதந் தோறும் ஆய்வு செய்கின்றனர். தலைமை ஆசிரியருடன், மற்ற ஆசிரியர்களும், தினமும் காலை உணவை சுவைத்து, அவற்றின் தரம், சுவையை ஆய்வு செய்கின்றனர்.

இதுகுறித்து, 1800 4258971 என்ற தொலைபேசி எண்ணில் வரும் குறைகளையும், புகார்களையும், மாவட்ட ஆட்சியர்கள் விசாரித்து, நிவர்த்தி செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *