பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

பாபநாசம், ஜூன் 15- 03.06.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அள வில் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளா கத்தில் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையிலும் மாநில ப.க. பொதுச் செயலாளர்வி.மோகன், குடந்தை கழக மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, குடந்தை கழக மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, குடந்தை கழக மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்சு.கலியமூர்த்தி வரவேற்புரையாற்றி பல்வேறு கருத் துகளை எடுத்துரைத்தார். தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தினை பற்றியும் மற்றும் கழ கக் கொள்கைகளை பற்றியும் கருத் துரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் உமையாள்புரம் கண்ணன், கைலாசம், லெனின் பாஸ்கர், ஜனார்த் தனன், திருஞானசம்பந்தம், வரத ராஜன், மு.வீரமணி, இளங்கோவன், இராஜராஜன், க.கலிய மூர்த்தி, அண்ணா துரை, இராணி, கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்ற னர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1. லெனின் பாஸ்கரின் தந்தை ஏகானந்தம், ஒடிசா தொடர்வண்டி விபத்தில் இறந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலும், வீர வணக்கம் தெரிவிக்கப்பட்டது.

2. ஈரோடு பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மாணங்களை ஏற் றுக்கொண்டு அதனை முழுமையாக செயல்படுத்துவது.

3. விடுதலை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களின் சந்தாக்களை பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

4.19.06.2023 திங்கட்கிழமை அன்று கபிஸ்தலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

5. 17.06.2023 சனிக்கிழமை அன்று கும்பகோணம் பெரியார் மாளிகை யில் நடைபெறும் “பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்” ஒன்றியத்தின் சார்பாக அதிக மாணவர்களை அனுப்பிவைப்பது என தீர்மானிக்கப் படுகிறது.

6. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை ஜீலை 2023இல் கீழ்க்கண்ட பத்து கிளைக் கழகங்களில் தெரு முனை பிரச்சாரக் கூட்டமாக நடத்துவது என தீர்மானிக் கப்படுகிறது.

கபிஸ்தலம், பெரியார் சிலை – திருப்பாலைத்துறை, அண்ணா சிலை – பாபநாசம் கடை வீதி, புதிய பேருந்து நிலையம் பாபநாசம், உள் ளிக்கடை, இராஜகிரி, அய்யம் பேட்டை, கோட்டச்சேரி, உமையாள் புரம், உம்பளாப்பாடி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *